
Charus Kitchen
ஆப்பம்-தேங்காய்ப்பால்

தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு டம்ளர்
வெள்ளை உளுத்தம்பருப்பு – 4 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சோடா உப்பு – சிறிதளவு
சாதம்- ஒரு கப்
உப்பு – தேவைக்கு
செய்முறை:
1.அரிசி,உளுந்து,வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
3. அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து 10 முதல் 12 மணி நேரம் வெளியில் வைத்து விட வேண்டும்.
4. ஆப்பம் செய்யும் 2 மணி நேரத்திற்கு முன்பு சோடா உப்பைச் சேர்க்க வேண்டும்.
ஆப்பம் செய்யும் முறை:
1. ஆப்பச்சட்டி(நான்ஸ்டிக்) நன்கு சூடான பின்பு ஆப்பச் சட்டியின் கைப்பிடியை பிடித்து மாவு வட்டமாக பரவுமாறு திருப்பி விடவும்.மூடி வைக்கவும்.
2. சுற்றி இலேசாக வெந்து மேலெழுந்து வரும்.
3. எடுக்க ஏதுவாக வந்த பிறகு ஆப்பத்தைத் தட்டிற்கு மாற்றலாம்.
சூடாகப் பரிமாற ருசி அதிகம்
தேங்காய் பால் செய்முறை:
தேங்காய்-2மூடி(துருவி பால் எடுத்துக்கொள்ளவும் )
வெல்லம் -300கிராம்
ஏலக்காய் மற்றும் சுக்கு-சிறிதளவு
செய்முறை:
தேங்காய் பாலுடன் வெல்லத்தை கலந்து கைபொறுக்குமளவு சூடுபடுத்தி அதனுடன் ஏலக்காய் மற்றும் சுக்கை தட்டி போட்டு இறக்கவும்.
இணைகள்:
ஆப்பத்திற்குத் தேங்காய்ப்பால், தேங்காய்ப்பால் குருமா, காய்கறி குருமா, தக்காளி குருமா, மிளகாய்ப்பொடி அருமையான இணைகள்.